உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாரதி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பாரதி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கடலூர் : கடலூரில், பாரதி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.பானுமதி தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுனர் கல்யாண்குமார் முன்னிலை வகித்தார். திருமலை வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் குப்புசாமி, திலகர் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். புதிய தலைவராக நிலவு செல்வராஜ், செயலராக துளசிங்கம், பொருளாளராக சாரதா, இணை செயலராக வெங்கடேசன், இணைப் பொருளாளராக குறிஞ்சி, மக்கள் தொடர்பு அலுவலராக செந்தாமரை உட்பட 19 பேர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர். ரமாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி