உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குருவாயூரப்பன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்

குருவாயூரப்பன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்

பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (28ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு மூலவர் பெருமாள், தாயார், சயன நரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்து காலை 6.30 மணிக்கு மூலவர் பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து 9 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் உள்புறப்பாடு நடந்து பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !