உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர் தற்கொலை

தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர் தற்கொலை

கடலூர் : தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெய்வேலி, வட்டம் 26ஐ சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன் சிவா, 21; தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். முதலாமாண்டு நடந்த தேர்வை சரியாக எழுதவில்லை. ஒரு சில பாடங்களில் மட்டுமே தேர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த சிவா வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவர் நெய்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை