உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயி மீது தாக்குதல்

விவசாயி மீது தாக்குதல்

திட்டக்குடி : கோழியூரில் மது வாங்க பணம் தர மறுத்த விவசாயியை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்ற­னர்.திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை கோழியூர் பஸ் நிலைய நிழற் கூடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த பிருத்திவிராஜ். 32; சுப்பிரமணியத்திடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். சுப்ரமணியம் மறுக்கவே ஆத்திரமடைந்த பிருத்திவிராஜ் கையில் இருந்த மது பாட்டிலால் அவரது தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணியம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி