உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூலாமேடு பள்ளியில் நல வாழ்வுத் திட்ட முகாம்

பூலாமேடு பள்ளியில் நல வாழ்வுத் திட்ட முகாம்

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த பூலாமேடு நடுநிலைப் பள்ளியில் சிறுவர்கள் நல வாழ்வுத்திட்ட பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குமராட்சி மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினர்கள் பள்ளி சிறார் நல வாழ்வுத்திட்டம் மூலம் 125 மாணவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சையளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐந்து மாணவர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். தன் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்து கல்வி போதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி