உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

கடலுார்: கடலுார் மாவட்டம், ராமநத்தத்தை சேர்ந்தவர் பழனிமுத்து,49, கூலித்தொழிலாளி. இவர் 13ம் தேதி இரவு போதையில், தனது மகன் கார்த்திக்கிடம்,23, தகராறில் ஈடுபட்டார். கார்த்திக், பழனிமுத்துவை கத்தியால் வெட்டினார். காயமடைந்த பழனிமுத்து, சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழனிமுத்து மனைவி தங்கம் கொடுத்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்தனர். இந்நிலையில் பழனிமுத்து, நேற்று இறந்தார். ராமநத்தம் போலீசார், கொலைமுயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை