உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 31ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

கடலுாரில் 31ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

கடலுார் : கடலுாரில், வரும் 31ம் தேதி, விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:2024ம் ஆண்டிற்கான ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 31ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்குகிறார். கடலுார் மாவட்ட விவசாயிகள், வேளாண் சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !