மேலும் செய்திகள்
விபத்துகள் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
28-Sep-2024
மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் பகுதியில் ஏர்-ஹாரன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், அவதியடைந்து வருகின்றனர்.கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மந்தாரக்குப்பம் பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ்கள், வேன், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர்-ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒலி மாசு ஏற்படுதல், காது சம்பந்தபட்ட நோய்கள், மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது வாகனங்களில் ஏர்-ஹாரன்களை பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஏர்-ஹாரன் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
28-Sep-2024