உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பஸ்சில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி

 பஸ்சில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி

நெல்லிக்குப்பம்: பண்ருட்டிக்கு செல்ல பஸ்சில் ஏறிய கூலி தொழிலாளி தவறி விழுந்து பலியானார். நெல்லிக்குப்பம் சிவசண்முக நகரை சேர்ந்தவர் சுந்தரராஜ்,65; விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற தனியார் பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது சுந்தரராஜ் தவறி கீழே விழுந்தார். இந்நிலையில் டிரைவர் பஸ்சை இயக்கியதால், பின்பக்க டயர் சுந்தரராஜ் மீது ஏறியது. இதில் படுகாமடைந்த சுந்தரராஜ், கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை