உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கார் மோதி தாய் பலி :மகன் காயம்

 கார் மோதி தாய் பலி :மகன் காயம்

சிதம்பரம்: மகனுடன் மொபட்டில் சென்ற தாய், கார் மோதி இறந்தார். சிதம்பரம், மன்னார்குடி தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி அகிலா,38; தனியார் லேப் டெக்னீசியன். இவர், தனது மகன் நவீனுடன்,17; நேற்று முன்தினம் இரவு மொபட்டில் தையாகுப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மொபட்டை அகிலா ஓட்டினார். சிதம்பரம் அடுத்த லால்புரம் அருகே பைபாஸ் சாலையை கடந்த போது, கிள்ளையில் இருந்து, சிதம்பரம் நோக்கி வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அகிலா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !