உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கூழாங்கற்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நடுவீரப்பு மெயின்ரோட்டில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.நடுவீரப்பட்டு போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம், 45; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை