உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு பாலியல் சீண்டல் தப்பியோடிய நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் சீண்டல் தப்பியோடிய நபருக்கு வலை

விருத்தாசலம் : மனநலம் பாதித்த சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரிடம், கடந்த 26ம் தேதி விருத்தாசலம் அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், 52, என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள சுப்ரமணியனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ