உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சந்தனக்கூடு விழா துவக்கம்

 சந்தனக்கூடு விழா துவக்கம்

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஆலோடிசாப் தர்காவில் சந்தனக்கூடு விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சந்தனக்கூடு விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அதையொட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு தொழுகை, 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு விழாவான சந்தனக்கூடு விழா வரும், 27ம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. அதையொட்டி அன்று இரவு சிறப்பு தொழுகையும், 28ம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு 'உரூஸ்' எனும் சந்தனம் பூசும் சந்தனக்கூடு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் ஊர் ஜமாத்தார்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை