உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதுப்பாளையத்தில் நாளை சூரசம்ஹாரம்

புதுப்பாளையத்தில் நாளை சூரசம்ஹாரம்

கடலுார்: கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது. கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை சுவாமி உள்புறப்பாடு நடந்து வருகிறது. நாளை 27ம் தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !