சிறப்பு வகுப்புகள் கட் மாணவர்கள் நிம்மதி
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள், பெற்றோர்கள் தினசரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோர்கள் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.அதன்பேரில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு விடுமுறை நாட்கள், காலாண்டு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிகள் இயங்கவோ, சிறப்பு வகுப்புகள் நடத்தவோ கூடாது என மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி தளாளர்கள், முதல்வர்களுக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன்காரணமாக தற்போது, 5:30 மணிக்கு மாணவர்களுக்கு பள்ளிகள் முடிவடைகிறது. இதனால், பெற்றோர், மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.