உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது.மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் 4 மாட வீதியை வலம் வந்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர்.இரவு 7:00 மணிக்கு அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து, ஊஞ்சல் உற்சவத்தில் பதினாறுகால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்,ஆராதனைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை