உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்

குடிநீர் குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்

கடலுார்: கடலுாரில் மாநகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகியது.கடலுார் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெருவில், மாநகராட்சி குடிநீர் குழாயில், நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ