உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராவல் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்

கிராவல் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று தெற்கு பெரியார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி, கிராவல் மண் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ