உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேன் - லாரி மோதி விபத்து வி.சி., கட்சியினர் 3 பேர் பலி

வேன் - லாரி மோதி விபத்து வி.சி., கட்சியினர் 3 பேர் பலி

வேப்பூர்: கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம், வில்லியநல்லுார் கிராமத்தை சேர்ந்த வி.சி., கட்சியினர் 30 பேர், திருச்சியில் நேற்று முன்தினம் நடந்த கட்சி மாநாட்டிற்கு வேனில் சென்றனர்.மாநாடு முடிந்து, அன்று நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வில்லியநல்லுாரை சேர்ந்த சிரஞ்சீவி, 26, வேனை ஓட்டினார். நேற்று அதிகாலை, 2:45 மணியளவில், கடலுார் மாவட்டம், வேப்பூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் என்.நரையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியுடன் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில், வில்லியநல்லுார் உத்திரகுமார், 29, யுவராஜ், 17, அன்புச்செல்வன், 28, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி