உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் கிராம மக்கள் போராட்டம்

 தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் கிராம மக்கள் போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் பணியை மீண்டும் துவங்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அடுத்த சாத்தக்கூடல் கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், சாத்துக்கூடல் - உச்சிமேடு இடையே செல்லும் கிராம இணைப்பு சாலையில் உள்ள ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த, 3 மாதங்களுக்கு முன் துவங்கியது. ஆனால், தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையினால், சாத்துக்கூடல் - உச்சிமேடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தரைப்பாலம் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என சாத்துக்கூடல் கிராம மக்கள் நேற்று முன்தினம் தரைப்பாலம் அமைக்கும் பகுதியில் நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்