உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக்கில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

குள்ளஞ்சாவடி; பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தார். பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி தங்கமதி, 34; இவர், நேற்று முன்தினம் புவனகிரி அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு கணவர் வேல்முருகனுடன் சென்று பைக்கில் வீடு திரும்பினார். குள்ளஞ்சாவடி அடுத்த பெலாந்தோப்பு அருகே வந்த போது, பைக்கில் அமர்ந்திருந்த தங்கமதி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ