மேலும் செய்திகள்
லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி
16-Nov-2025
கடலுார்: சாலையை கடக்க முயன்ற தொழிலாளி, பைக் மோதி இறந்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அல்லிமுத்து,55; இவர், கடலுாரில் தங்கி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடலுார்-சிதம்பரம் சாலை, ஈச்சங்காடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் அவர், பஸ் ஏற சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Nov-2025