உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிலம் அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

நிலம் அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

கடலுார் : நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லத் தேவையில்லை. https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்த நேரத்திலும் எங்கிருந்தும் நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே விண்ணப்பித்து செலுத்தலாம்.நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை