உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பைக்குகள் மோதி வாலிபர் பலி

 பைக்குகள் மோதி வாலிபர் பலி

குள்ளஞ்சாவடி: குறிஞ்சிப்பாடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமச்சந்திரன், 21; இவர் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி கடைவீதியில் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் ஒன்று, ராமச்சந்திரன் பைக் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் படுகாயமடைந்த ராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய தொளுவன்குப்பம் பகுதியை சேர்ந்த சிவா, 32, என்பவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை