உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி : தர்மபுரி அருகே, காட்சி பொருளான சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி, மல்லிகுட்டை பஞ்.,க்கு உட்பட்ட மேடு-ஹள்ளியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், ஒரு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்-டுமே, இதில் தண்ணீர் வந்த நிலையில், இதன் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், இதில் தண்ணீர் வரத்தின்றி காட்சி பொருளாக மட்டுமே தொட்டி உள்ளது. இதனால், இப்பகு-தியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீருக்காக அவ-திப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பஞ்., நிர்-வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இங்குள்ள மக்களின் நலன்க-ருதி இத்தொட்டியின் மின்மோட்டாரை சீர-மைத்து, மீண்டும் தண்ணீர் வர, அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ