உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கே.ஈச்சம்பாடி நீரேற்று திட்டத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

கே.ஈச்சம்பாடி நீரேற்று திட்டத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கர்த்தானுாரில், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் மற்றும் வாணியாறு அணை இடதுபுற பாசன வாய்க்கால் நீட்டிப்பு திட்டம் ஆகிய-வற்றை உடனடியாக செயல்படுத்தக்கோரி, தமிழக அரசை வலி-யுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வரத-ராஜன் தலைமை வகித்தார். பா.ம.க., மாநில உழவர் பேரியக்க செயலாளர் வேலுசாமி பேசினார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடத்துார் ஒன்றியத்திலுள்ள மணியம்பாடி, ராணிமூக்கனுார், ஓசஅள்ளி, சிந்தல்பாடி, கர்த்-தானுார், ராமியணஅள்ளி, தென்கரைகோட்டை, தாளநத்தம், கேத்-துரெட்டிப்பட்டி, தாதனுார், குருபரஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி உள்பட, 16 பஞ்.,களில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும். எனவே, தமிழக அரசு உடனடி-யாக இத்திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி, ஆர்ப்பாட்-டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ