உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுகாதார விழா கண்காட்சி

சுகாதார விழா கண்காட்சி

தர்மபுரி: பென்னாகரம் அரசு மருத்துவமனையில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சுகாதார விழா கண்காட்சி நடந்தது. கலெக்டர் லில்லி தலைமை வகித்தார். துணை இயக்குனர் (குடும்ப நலம்) ஆஷாபிரடரிக் வரவேற்றார். விழாவை துவக்கி வைத்து கலெக்டர் லில்லி பேசுகையில், ''அனைத்து பெண்களும் சிறு குடும்ப நெரியை கடைப்பிடித்து மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை மக்கள் பார்வையிட்டு, குடும்ப நலம், சுகாதாரம் குறித்த கருதக்துக்களை ஏற்று நலமாக வாழ உறுதி எடுத்து கொள்ள வேண்டும்,'' என்றார். மக்கள் தொகை கட்டுப்படுத்தல் குறித்து நடந்த பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. கண்காட்சியில் குடும்ப நலம், எய்ட்ஸ், காசநோய், நீரழிவு நோய், சித்த மருத்துவம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எல்.ஏ., நஞ்சப்பன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) நிர்மலா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அய்யனார், விரிவாக்க கல்வியாளர் காந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கனிமொழி, வட்டார விரிவாக்க கல்வியாளர் கோவிந்தராஜன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி