உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர்களுக்கு பாராட்டு விழா

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர்களுக்கு பாராட்டு விழா

தர்மபுரி: அரசு துறைகளில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தர்மபுரி, சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, இணை செயலாளர் நாகராஜன், தணிக்கையாளர் முனிராஜூ ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் தெய்வானை வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் பேசினார். பணி ஓய்வு பெற்ற முன்னாள் சங்க தலைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை