மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
3 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
3 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
3 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி;பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நாரணாபுரம் வி.ஏ.ஓ., தீபாவுக்கு வந்த ரகசிய தகவல்படி, நேற்று காலை கோபாலபுரம்- செங்கரைக்கோட்டை செல்லும் சாலையில், சுகர் மில் எதிரே உள்ள பெருமாள் கோவில் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, கள்ளியூரை சேர்ந்த சண்முகம் என்பவர் டிராக்டரில் ஓடக்கல் ஏற்றி வந்தார். டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்தார். அதில், அரசு அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை ஏ.பள்ளிப்பட்டி போலீசில் ஒப்படைக்க வி.ஏ.ஓ., கூறினார். ஆனால் சண்முகம் டிராக்டரை அங்கே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.இதுகுறித்து வி.ஏ.ஓ., தீபா அளித்த புகார்படி, ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடக்கல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago