மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
9 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
9 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
9 hour(s) ago
தர்மபுரி: தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று போக்கால் ஏற்படும் இறப்பை தடுக்க, வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தர்மபுரியில் நேற்று முதல் அடுத்த மாதம், 31 வரை , 2 மாதம் முகாம் நடக்கிறது. இதில், தர்மபுரி மாவட்டம் முழுவதுமுள்ள, 1.36 லட்சம் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., எனப்படும் உப்பு, சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் மற்றும், 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளன. 6 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத்தை பற்றியும், ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நல்லம்பள்ளி அருகே அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் நடந்த, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கும் முகாமை, கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார். இதில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, நல்லம்பள்ளி வட்டார மருத்துவர் வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago