உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்

புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்

மாரண்டஹள்ளி:தர்மபுரி மாவட்டத்தில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி நேற்று முன்தினம், மாரண்டஹள்ளி, 4 ரோடு பகுதியில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.அதையடுத்து அக்கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ