உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம்

அரூரில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம்

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தீர்த்தமலை, கோட்டப்பட்டி, மாம்பாடி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பல பகுதிகளில், சமீபத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெ-டுத்து ஓடியதுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியது. தொடர்மழையால், கரும்பு பார் மாற்றுதல், மரவள்ளிக்கிழங்கு, பருத்தி உள்ளிட்டவைகளுக்கு களை எடுத்தல், உரம் இடுதல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்காச்-சோளம், சோளம், மஞ்சள் ஆகியவற்றை மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை