உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.74 கோடிக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.74 கோடிக்கு ஏலம்

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், இந்த ஜூலை மாதத்தின், 15 நாட்களில் மட்டும், 2.74 கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் நடந்தது.தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும், தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள-மான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், இம்மாதத்தின், 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடு-களை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை.இந்நிலையில், 661 விவசாயிகள், 1,177 குவியல்களாக, 42,668 கிலோ வெண்பட்டு கூடுகளை கொண்டு வந்தனர். இது, 217 முதல், 630 வரை சராசரியாக, 486 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 2.74 கோடி ரூபாய். கடந்த, 15 நாட்-களில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 3.11 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை