நாளை கூட்டுறவு துறை பணியாளர் நாள் நிகழ்வு
தர்மபுரி: தமிழக சட்டபேரவையில் வரவு, செலவு திட்டம், 2024 - -25ல், கூட்டுறவு துறைக்கான, 2024 ஜூன், 27ம் தேதி நடந்த மானிய கோரிக்கையின் போது, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதில், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மண்-டல அளவில், 'பணியாளர் நாள் நிகழ்வு' நடத்தப்படும் என அறி-விக்கப்பட்டது.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 'பணியாளர் நாள் நிகழ்வு' தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், வரும், 10ம் தேதி நாளை நடக்க உள்ளது என, இணைப்பதிவாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.