உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு நடவடிக்கை

தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு நடவடிக்கை

பென்னாகரம்:தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, 'காக்கும் பணி எங்கள் பணி' என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு, தமிழகம் முழுவதும், பேரிடர் காலங்களிலும், தீப்பற்றக்கூடிய நேரங்களிலும் மேற்கொள்ள வேண்டிய, தீ தடுப்பு நடவடிக்-கைகள் குறித்து, 2 நாள் பயிற்சி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் நேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. இதில், பென்னாகரம் தீய-ணைப்பு நிலை அலுவலர் சந்தோஷம், ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில், பொதுமக்க-ளுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை