உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்கள் மட்டும் வடம் பிடித்த முருகன் கோவில் தேரோட்டம்

பெண்கள் மட்டும் வடம் பிடித்த முருகன் கோவில் தேரோட்டம்

தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த் திருவிழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, கோவில் தைப்பூச தேரோட்டம் நடந்தது.பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள், பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், 10,000 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.நேற்று மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ