நிறுத்திய அரசு பஸ் இயக்க கோரிக்கை
அரூர்: அரூரில் இருந்து அதிகாலை, 5:30 மணிக்கு பெருமாள்கோவில், குடுமியாம்பட்டி உள்ளிட்ட, 10 கிராமங்களின் வழியாக, 25 எண் கொண்ட அரசு டவுன் பஸ் கீரைப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்-தது. கொரோனா ஊரடங்கில் நிறுத்தப்பட்ட இந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் சிரமத்திற்-குள்ளாகினர். மேலும் இந்த கிராமங்களுக்கு மீண்டும் அரசு டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எவ்-வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.