உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.50க்கு விற்பனை

தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.50க்கு விற்பனை

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி அதிகம் விளைவிக்க கூடிய பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளது. தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த, 16 அன்று கிலோ தக்காளி, 28 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 38 ரூபாய் எனவும், நேற்று மேலும் விலை உயர்ந்து, 50 ரூபாய் என விற்பனையானது. வெளி மார்க்கெட்டில், கிலோ தக்காளி, 60 முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை