மேலும் செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் கொட்டிய கனமழை
02-Sep-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், 3:00 மணி முதல், மாவட்டத்தில் சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் விட்டு விட்டு பரவலாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்டஹள்ளியில், 26 மி.மீ., மழை பதிவானது. இதுதவிர, ஒகேனக்கல், 21 மி.மீ., பென்னாகரம், 18, பாலக்கோடு, 17, பாப்பிரெட்டிப்பட்டி, 14 மற்றும் அரூரில், 3 மி.மீ., மழை பெய்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
02-Sep-2025