உள்ளூர் செய்திகள்

கொடையில் மழை

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மிதமான மழையுடன் நிலவிய சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.கொடைக்கானலில் சில தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் சாரல் நீடிக்க குளு குளு நகர் சில்லிட்டது. நேற்று 1 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.பயணிகள் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை ,சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தரையிரங்கிய மேகக் கூட்டத்தையும் ரசித்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !