உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடையை குளிர்வித்த மழை

கோடையை குளிர்வித்த மழை

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது.சில மாதங்களாக வறண்ட வானிலையுடன் சுட்டெரிக்கும் வெயில் மலைப்பகுதியை தகிக்க வைத்தது. சில தினங்களாக மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காண லேசான இடி, மின்னல் நீடித்தது. நேற்று மாலை கால் மணி நேரம் மிதமான மழை பெய்தது. கோடையில் பெய்த மழையால் மலைப் பகுதி குளிர்ந்தது. பண்ணைக்காடு, பூலத்துார், கும்பறையூர், கானல்காடு, மங்களம்கொம்பு , கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியிலும் லேசான மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை