உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாராகி அம்மன் கோயிலில் 108 பொங்கல்

வாராகி அம்மன் கோயிலில் 108 பொங்கல்

சாணார்பட்டி, : சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் 108 பொங்கல் வைத்து உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் 108 பொங்கல் வைத்து வாராஹி அம்மனுக்கு படைக்க ,திரவிய அபிஷேகம், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வேள்வி பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை