உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நவ.15ல் கழிவு வாகனங்கள் ஏலம்

நவ.15ல் கழிவு வாகனங்கள் ஏலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் கழிவு வாகனங்களான 4 டூவீலர்கள், 9 கார்கள் என 13 வாகனங்கள் நவ.15ல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. டூவீலர் எடுக்க விரும்புபவர்கள் முன்பணமாக ரூ. 1000 , கார்களுக்கு ரூ. 5 ஆயிரம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் சீட்டு நவ.13 காலை 10:00 மணி முதல் நவ.14 மாலை 5 :00மணிவரை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் விநியோகிக்கப்படும். வாகனங்களை ஏலத்தில் பெறும் நபர்கள் ஏலத் தொகை முழுவதையும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் செலுத்திட வேண்டும். விவரங்களுக்கு 94981 85549,83000 02802 ல் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ