உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு

அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க ஆகம விதிகளுக்கு புறம்பாக 2 மணி நேரம் பக்தர்களை காக்க வைத்த ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் நகர தலைவர் சிவா அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆகம விதிகளுக்கு புறம்பாக 2 மணி நேரம் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல், அறங்காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஹிந்து அறநிலையத்துறை சூப்பிரண்டு ராஜா, அறநிலையத்துறை அதிகாரிகளையும், இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறை அதிகாரிளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை