மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
20 hour(s) ago
ஹாக்கி போட்டி
20 hour(s) ago
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
20 hour(s) ago
கோயிலுக்கு சரக்கு வாகனம்
20 hour(s) ago
சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்
20 hour(s) ago
வேடசந்தூர் நேருஜி நகர் பூங்கா ரோட்டில் பைப் லைன் பதிப்பதற்காக ரோட்டை வெட்டி வைத்துள்ளனர்.இதனால் டூவீலர்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். ரோட்டை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.- -ஆர்.செல்வராகவன், வேடசந்துார். விரைவில் சீர் செய்யப்படும்
பைப் லைன் பதிப்பதற்காக துண்டித்துள்ளனர். விரைவில் அது சரி செய்யப்படும்.-மேகலா,- பேரூராட்சி தலைவர். ரோடு சரி இல்லை
காணப்பாடி கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் ரோடு கப்பி ரோடாக இருப்பதால் சிரமம் உள்ளது.- --நல்லதம்பி, காணப்பாடி. பரிந்துரை செய்யப்படும்
ஒன்றிய நிர்வாகத்திடம் ரோடு அமைக்க பரிந்துரை செய்யப்படும்.--பாண்டி, ஊராட்சி தலைவர், காணப்பாடி. தெருவிளக்கு வசதி தேவை
ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகர் வடக்கு பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்குகிறது.-குமரேசன், ஒட்டன்சத்திரம். பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
ஒட்டன்சத்திரம் நகராட்சி கஸ்துாரி நகர் பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.-திருமலைசாமி, நகராட்சி தலைவர். வாய்க்கால் சேதம்
கோம்பைபட்டி ஊராட்சி கே.அய்யாபட்டி 1வது வார்டு பகுதியில் சிமென்ட் சாலை , கழிவு நீர் வாய்க்கால் சேதம் அடைந்து அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.-சுதாகர், கே.அய்யாபட்டி. நடவடிக்கை எடுக்கப்படும்
1வது வார்டு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க அளவீடு பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- -தமிழரசி கார்த்திகைச்சாமி, கோம்பைப்பட்டி ஊராட்சி தலைவர். கழிவுகளால் அவதி
கொடைக்கானல் வில்பட்டி ரோட்டில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது,-என். பாலன், வில்பட்டி. நடவடிக்கை எடுக்கப்படும்
வில்பட்டி ஊராட்சி ரோட்டோரம் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.- -பாக்யலட்சுமி, ஊராட்சி தலைவர், வில்பட்டி. குப்பை அள்ளப்படுவதில்லை
33 வது வார்டில் கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி ரோட்டில் குப்பை சரியாக அள்ளப்படுவதில்லை.-மகேஷ், அடிவாரம் அள்ள நடவடிக்கை
நகராட்சி ஊழியர்களை வைத்து முறையாக அள்ளப்படும்- -நடராஜன், கவுன்சிலர் ரோடு சரியில்லை
பெரியகுளம் மஞ்சலாற்று பாலத்திலிருந்து காளியம்மன் கோயில் வரை மெயின் ரோடு மேடு பள்ளத்துடன் குண்டும் குழியுமாக உள்ளது.- -பிரபு, வத்தலகுண்டு சரி செய்யப்படும்
பொங்கலுக்குள் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.-முத்துவீரன்,உதவி பொறியாளர் ,நெடுஞ்சாலை
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago