உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதற்கோர் தீர்வு காணுங்க : ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை: தினமும் நெரிசலில் பரிதவிக்கும் மக்கள்

இதற்கோர் தீர்வு காணுங்க : ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை: தினமும் நெரிசலில் பரிதவிக்கும் மக்கள்

மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் போலீசார் பற்றாக்குறையால் போலீசார் பணிகளில் தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. இரவு பணியில் ஈடுபடுவோர் சிலநேரங்களில் பகல் நேரத்தில் பணிக்கு அழைக்கப்படும் நிலை ஏற்படுகிறது . பல போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 10 க்கு மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் காலியாக உள்ளன. போலீசார் பற்றாக்குறை உள்ள நிலையில் அயல் பணிக்கும் அனுப்பப்படுகின்றனர். இதனால் ஸ்டேஷன் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.நகர்களில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அதிகளவில் பாதிக்கின்றனர்.இவற்றை ஒழுங்குப்படுத்த போலீசார் இல்லாததால் நெரிசல் என்பது தொடர்கிறது .இதோடு அதிக அளவில் போக்குவரத்து விதி மீறல்களும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போதுமான அளவு போக்குவரத்து போலீசாரும் இல்லை. மாவட்டத்தில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போலீசார் இல்லாமல் காலியாக உள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டுபிடிக்க இயலாமல் சிரமம் அடைகின்றனர். இது தவிர போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நேரங்களில் போதிய போலீசார் இல்லாமல் பாதுகாப்பு பணியிலும் தொய்வு ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை