மேலும் செய்திகள்
சேதமான தண்ணீர் தொட்டிகளால் அச்சமடையும் மக்கள்...
02-Dec-2024
கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு சுற்றித் திரியும் கால்நடையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.--கவுரிஈஸ்வரி, திண்டுக்கல்.பள்ளத்தால் மக்கள் அச்சம் : திண்டுக்கல் - பழநி ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே சாக்கடை நடைமேடை சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர். நடைமேடையை சரிசெய்ய வேண்டும்.--விக்னேஷ், திண்டுக்கல்.-----------நாய்களால் வாகனஓட்டிகள் அவதி : திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இவைகள் அச்சுறுத்தலாக உள்ளதால் மக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சவுந்தரராஜன், ரவுண்ட் ரோடு.குப்பையால் உருவாகும் சீர்கேடு : பழநி பாலசமுத்திரம் ரோட்டில் பல நாட்கள் ஆகியும் குப்பையை அகற்ற படாததால் நோய் தொற்று அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆறுமுகம், பழநி.-----------கொசு உற்பத்தியாகும் கழிவுநீர் : திண்டுக்கல் கிழக்கு பாட்டாளி தெரு ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாயில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் செடிகள் வளர்ந்து அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும்.-முருகன், பழநி.-----------சேதமான ரோடுகளால் பாதிப்பு : பழநி மாரியம்மன் கோயில் தெரு 9வது வார்டில் உள்ள ரோடுகள் கடந்த 4மாதங்களாக குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியில் பயணிக்கும் மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்படுகின்றனர். பாதையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜன், பழநி.------------ஆக்கிரமிப்புகளால் அல்லல் : பழநி -திண்டுக்கல் ரோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே ரோட்டில் ஆக்கிரமிப்பு உள்ளது. பஸ் ஸ்டாப்பில் பயணிகள் மிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.-நாகராஜன், ஆயக்குடி.------------
02-Dec-2024