10ம் வகுப்பில் சாதித்த வித்யா பார்த்தி பள்ளி
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் திண்டுக்கல் வித்யா பார்த்தி மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளித் தாளாளரும் பள்ளிக் குழுமத் தலைவருமான கிருஷ்ணமூர்த்தி பாராட்டினார். மாணவி யோகவிகாஷினி, மாணவர் சந்தோஷ்குமார்500க்கு 483, மாணவர் லோகேஷ் கண்ணா 477 , மாணவிகள் இந்துஜா, ஐஸ்வர்யா தலா 473 பெற்றனர்.17 பேர் 450க்கு மேலும், 47 பேர் 400க்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றிக்கு வழிகாட்டிய தலைமை ஆசிரியர் பாலகார்த்திக், உதவி தலைமை ஆசிரியர் ரகுராம், ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.