முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
திண்டுக்கல்: நத்தம் ரோடு திருஇருதய கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. கொசவபட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வநாயகம் கலந்து கொண்டார், துணை முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார. முதல்வர் ஹேமலதா, துணை முதல்வர் சபரி ஆரோக்கியதாஸ், சுப்பீரியர் ஞானப்பிரகாசம், செயலாளர் ஜேசுதாஸ் பேசினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ராஜ் நன்றி கூறினார்.