உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலிதாராபுரம்:தாராபுரம் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பலியானார்.தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிராஜுதீன், 42; நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் குத்தகை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் நள்ளிரவில் தோட்டத்துக்கு சென்றபோது, இறந்து கிடந்தார். புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ